Monday 3 November 2008

மண் புழு உரம் தயாரித்தல்

மண் புழு உரம் என்பது, மண் புழுக்கள் வைக்கோல்,சானம் போன்ற இயற்கை இடு பொருட்களை உன்பதனால் வெளியேற்றும் கழிவுகளை மட்க செய்து கிடைக்கும் ஒரு எருவாகும்.

மண்புழுக்களை தேர்வு செய்யம் முறை
  • புழுக்கள் அதிகம் உள்ள மண்ணின் மேற்பரப்பைக் கண்டறிய வேண்டும்.
  • 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
  • வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
  • 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எரு குழி தயாரித்தல்
  1. எரு-குழிகளை நாம் நம் வசதிக்கேற்ப வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம்.
  2. செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் அமைக்க வேண்டும்.
  3. தொட்டியினை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும்.
  4. வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும்.
  5. தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
நான்கு அறை தொட்டி

நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுட மண்புழு படுக்கை தயாரித்தல் மண்புழு படுக்கை

  • அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.
  • குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமையக்க வேண்டும்.
  • கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது.(வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது)
  • 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகள், சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்த கழிவுகள் ஆகியவற்றை சரி செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும்.
  • இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
  • இந்த இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு கலக்கிவிட வேண்டும்.
  • முறையாக நீர் தெளித்து, சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.
எரு உருவாதல்
  • அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.
  • 60 - 90 நாட்களில் (தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.
  • புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2-3 நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
  • மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை தொட்டியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம்.
  • மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும்.
  • இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
  • புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து உலர்த்த வேண்டும்.
  • பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.
  • சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.
  • இரு அறை அல்லது நான்கு அறை தொட்டியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.
மண்புழு உரத்தின் பயன்கள்
  1. இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல தரமுடைய, நச்சுத்தன்மையற்ற எரு கிடைக்கிறது.
  2. பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.
  3. தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.
  4. பல மக்களுக்கு, மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
  5. இளைஞர்களும், சுய உதவி குழு சார்ந்த பெண்களும் குழுவாக சேர்ந்து இதனை தயார்செய்யது விற்பனை செய்யலாம்.

No comments: