Sunday 28 December 2008

அழகுக் குறிப்புகள்

முக பொலிவுற்கு
  • தக்காளி பழத்தை முகம் முழுவதும் தடவி 2 நிமிடங்களில் கழுவவும், இது எண்ணை வடியும் முகத்திற்கு நல்ல பயன் தரும்.
  • பால் ஏடில் ஒரு சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவவும்.
  • தோசை மாவில் ஒரு சொட்டு நல்லெண்ணை கலந்து தேய்த்து முகத்தை கழுவவும்.
  • உருளைக்கிழங்கைத் தோல் சீவி மிக்ஸியில் அரைத்து முகத்திற்கு போட்டு வந்தால் முகமும் பொலிவு பெறும்.அதே சமயம் கண்ணிர்க்குக் கீழ் உள்ள கருவளையமும் மறையும்.
  • வெள்ளரித்துண்டு,தக்காளி இரண்டும் அரைத்து முகம் முழுவதும் அல்லது கருவளையத்தின் மீது மட்டுமோ போட்டால் விரைவில் கருவளையம் நீங்கிவிடும்.
  • ஓட்ஸ்-2ஸ்பூன்,பாதாம்-2,தேன்1ஸ்பூன்,தயிர்-1ஸ்பூன் இவைகளை நன்கு குழைத்து முகத்தில் போட்டு காய்ந்த பிறகு முகம் கழுவினால் முகம் நன்கு பொலிவடையும்.

No comments: