Tuesday 13 January 2009

சர்க்கரைப் பொங்கல் புளிக் குழம்பு

தேவையானப் பொருட்கள்
  • கத்தரிக்காய்-3
  • பரங்கிக்காய்-4துண்டு
  • வாழைக்காய்-6துண்டு
  • அவரைக்காய்-5
  • நறுக்கிய சின்ன வெங்காயம்-1கைப்பிடி
  • தக்காளி -1
  • பச்சை மொச்சைக்காய்-1கப்
  • தட்டை பயிறு-1/4கப்
  • புளி-1எழுமிச்சை அளவு
  • கடலைப் பருப்பு-1தேக்கரண்டி
  • உ.பருப்பு-1/4தேக்கரண்டி
  • தனியா-1/4தேக்கரண்டி
  • வரமிளகாய்-2
  • தேங்காய்-1/2மூடி
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தழை
  • உப்பு-தேவைக்கு
  • மஞ்சள் தூள்-1பின்ச்
  • சாம்பார்த் தூள்-11/2மேஜைக்கரண்டி.
செய்முறை
  1. தட்டைப் பயிறை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. பின் தட்டைப் பயிறையும்,பச்சை மொச்சை (இல்லையெனில் காய்ந்த வெள்ளை மொச்சையையும்) சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  3. கடலைப் பருப்பு, உ.பருப்பு, தனியா, வரமிளகாய், தேங்காய், கருவேப்பிலை ஆகியவற்றை கொஞ்சம் எண்ணெயில் வறுத்து பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,நறுக்கிய சி.வெங்காயம்,தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு நறுக்கிய காய்களை சேர்க்கவும்.
  6. அதனுடன் அரைத்த மசாலாவை ஊற்றி,தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள்,சாம்பார்த் தூள்,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  7. இதனுடன் வேக வைத்த தட்டைப் பயிறையும்,பச்சை மொச்சையையும் சேர்க்கவும்
  8. குழம்பு நன்கு கொதித்தவுடன் புளி ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  9. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

No comments: