Tuesday 16 December 2008

விவசாயத்தில் மாடுகளின் முக்கியத்துவம்

கறவை மாடுகளின் தேர்வு

கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

  • மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.
  • மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.
  • கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது. எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.
  • தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.
  • யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.
  • அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.
  • ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.
அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்
  • கவர்ச்சியான தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
  • உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.
  • கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.
  • மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.
  • மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.
  • மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.
வணிக ரீதியான பால் பண்ணைக்கான இனங்களின் தேர்வு- ஆலோசனைகள்
  • இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும். இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 : 50 அல்லது 40 : 60 என்ற விகிதத்தில்). எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
  • சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய பால் தேவை. எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.
  • உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும். ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும். மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.
வணிக ரீதியான பண்ணைக்கான மாடு . எருமைகளை தேர்வு செய்யும் முறை பசுமாடுகள்
  • ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 - ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது. (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 - 15,000)
  • நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது.
  • கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.
  • பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது. இது எருமைப் பாலைவிட சற்று குறைவாக உள்ளது.
எருமைகள்
  • மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.
  • பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது. இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.
  • எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம். இதனால் செலவு குறைகிறது.
  • எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது. மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது. காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.
  • எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை.
கன்று பாரமரிப்பு
  • " இன்றைய கன்றுகள் நாளைய பசுக்கள் " கன்றுகள் வளர்ச்சி குன்றினால் பருவமடைவது தாமதமாகி உற்பத்தி திறன் குறைந்து விடுகிறது.
  • கன்று பிறந்தவுடன், தொப்புள் கொடியை சுமார் 8 செ.மீ. விட்டு சுத்தமான கத்தரியால் வெட்டி டிஞ்சர் அயோடின் தடவ வேண்டும்.
  • கன்று பிறந்த 2 மணி நேரத்திற்குள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சீம்பால் கொடுக்க வேண்டும்.
  • கன்றுகளுக்கு தாய்ப்பாலோடு கன்று தீவனத்தையும் சேர்த்து கொடுத்தால் கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கன்று தீவனம் கீழ் கண்டவாறு தயாரிக்காலாம். மக்காசோளம்30 பங்கு பிண்ணாக்கு27 பங்கு தானியங்கள்20 பங்கு தவிடு10 பங்கு உடைத்த அரிசி10 பங்கு தாதுஉப்புக் கலவை3 பங்கு
  • கன்றுகள் பிறந்த 2- 3 வாரங்களில் பசும்புற்களையும் தீவனக்கலவையையும் தின்னத் தொடங்கும்.
  • கன்றுகளில் ஏற்படும் சிறுநீர் குடித்தல், மண் மற்றும் குப்பைகளை உண்ணும் பழக்கங்களை தடுக்க தொழுவத்தில் உப்புக்கட்டிகளை தொங்கவிட வேண்டும்.
  • கலப்பின மாடுகளில் கொம்புகள் திடமான இல்லாத காரணங்களால், கலப்பின கன்றுகளின் கொம்பு குருத்தை 21 நாட்களில் கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு நீக்க வேண்டும்.
  • கன்று பிறந்த ஒரு வாரத்திலும் பிறகு மூன்றாவது வாரத்திலும் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். பின்னர் இரண்டு மாததிற்கு ஒரு முறை 6 மாத வயது வரை குடற்புழு நீக்க வேண்டும்.
  • கன்றுகளுக்கு 4 முதல் 6 மாத வயதில் கோமாரி நோய், சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் நோயைகளுக்கான தடுப்பூசிகளை போடவேண்டும். கோமாரி நோய் தடுப்பூசியை 6 மாததிற்கு ஒரு முறையும் சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் தடுப்பூசிகளை வருடத்திற்கு ஒரு முறையும் திரும்ப திரும்ப போடவேண்டும்.

No comments: